Tuesday, April 15, 2008

தனிமையாய்.....




அவசரமா கடைசி நாளில் போடனுமேன்னு பழய படங்களைத் தேடி பிடித்ததில் இந்த கழுகாரும் பூனையாரும் தான் தனிமையில் வாடியவங்க..
அப்படியே பதிவில் இணைத்துவிட்டேன்.. எந்த பிற்சேர்க்கை வேலயும் செய்யவில்லை.. செய்ய நேரமும் இல்லை .. :-(
கழுகாரைத்தான் ஏப்ரல் 2008 போட்டிக்கு இணைக்க எண்ணம்.. ஆனா எந்த கழுகார் முதலா இரண்டாவது தெரியலயே.. யாரச்சும் சொல்லுங்க.. இன்னும் நேரம் இருக்குல்ல.. :-)

13 comments:

ஆயில்யன் said...

இரண்டாவது கழுகார்தான் சூப்பர்

தன்னையே பார்த்து நொந்துகொள்ளும் தனிமை :)

Thamiz Priyan said...

முதல் கழுகார் தான் தனியா இருக்கார். அவர்தான் யாரையோ எதிர்பார்த்து ஏமாந்த :( தனிமை தெரியுது... இரண்டாவது கழுகார் யாரையோ பார்த்து விட்டார் போல் தெரியுது.... :)

Amal said...

முதல் இரண்டு படங்களும் தனிமைக்கு பொருத்தமானவை. முதல் படத்தின் background texture அருமையாக உள்ளதாக எனக்குப் படுகிறது. கொஞ்சம் பிற்சேர்க்கை செய்து அனுப்புங்கள். வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆயில்யன்..

ஆனா மூன்று பேரு கருத்துல இரண்டு பேர் ஓட்டு (பின்னூட்டத்தில 2 சேட்டில 2) முதல் கழுகாருக்கே என்பதால் அதையே போட சொல்லியாச்சு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தலையை குனிஞ்சதை வச்சு சொல்றீங்களா தமிழ்பிரியன்.. :) நல்லாருக்கே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அமல் .. பிற்சேர்க்கை செய்யறதுக்கு இந்த முறை எனக்கு முடியல ,.. எதோ க்ராப் செய்திருக்கேன் கொஞ்சம் அவ்வளவு தான்..

மங்கை said...

ஆஹா ஒவ்வருத்தர் பின்னூட்டமும் சூப்பர்...எப்படியோ தனிமைனு ஒத்துட்டாங்க..:-))

நல்லா இருக்குப்பா..

ரசிகன் said...

முதல்கழுகு ஒரு மூலையில சோகமா உக்கார்ந்திருக்கார்.ரெண்டாவது ஏதோ இரையை கீழே பாக்கற மாதிரி இருக்கு:)

முதல் ஓகே..

பூனை சோம்பல்லாம் தனிமைய அம்புட்டு காட்டலையே :P

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி மங்கை.. ஆமா நான் கூட யோசிச்சேன் இதெல்லாம் போடலாமா ஒத்துப்பாங்களான்னு.. ரசிகர்கள் ஒத்துக்கிட்டாங்க.. நடுவர்கள் என்ன சொல்றாங்கன்னு பாப்போம்..போன தடவை ஒவ்வொரு தனி போட்டோவுக்கும் விமர்சனம் தரலை இந்த தடவை போட்டே ஆகனும்ன்னு சொல்லனும்..

இராம்/Raam said...

1st படம் நல்லாயிருக்கு..... PP பண்ணியிருந்தா Perfect'a வந்திருக்கும்....

துளசி கோபால் said...

என்னப்பா சத்தம் இங்கே? கொஞ்சம் தூங்க விடமாட்டீங்களா நம்மாளை:-))))

SurveySan said...

ரெண்டாவதுல கழுகு அழகு.

முதலில் படம் அழகு.

முதலே அனுப்பலாம்னு நெனைக்கறேன்.

ஆனா, பி.பி பண்ணிட்டு அனுப்புங்க, அப்பதான் எடுபடும்.

கோபிநாத் said...

நானும் இருக்கேன்...நானும் சொல்லுவேன்..முதல் கழுகார்தான் அழகு ;))

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers