Sunday, January 23, 2011

முகம் போட்டிக்கு


வெகு நாட்களாக போட்டிக்கு எதுவும் படம் அனுப்பவில்லை. இம்முறை முகம் தலைப்பு பிடித்திருந்தது... இப்படம் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி.

.

முதலில் இந்த படத்தை அனுப்ப எண்ணி இருந்தேன். பிறகு அதன் பின் புலம் அவ்வளவு கச்சிதமாக இல்லை என்று விட்டுவிட்டேன். விளையாட்டில்  குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பாருங்களேன். ஜெயிப்போமோ என்று ஒரு பையனுக்கு யோசனை போல.

Thursday, December 24, 2009

மெர்ரி க்ரிஸ்மஸ் :)



இது எங்கள் வீட்டு கிருஸ்துமஸ் மரம். பரிசு எல்லாம் அலங்காரம் தான்.உண்மையான பரிசு மகனுக்கு தாமஸ் த ட்ரயின் ஸ்டிக்கர் புக்.ஆங்கிலம் ஸ்மால் லெட்டர் எழுதப் பழகுவதற்கு... கிருஸ்மஸ் தாத்தா ராத்திரியே கொண்டுவந்து வச்சிட்டுப் போயிட்டாராம். :)



இது எங்க ஊரு ஷாப்பிங் மால் கிருஸ்துமஸ் அலங்காரங்கள்.உள் அலங்காரங்கள் ஸ்னோ மேன்.சாண்ட்டாவோட வீடும் வீட்டுக்குப் போகிற வழியும்...



அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே என்ன ஒரு அழகான பாடல் இல்ல ..
மெர்ரி கிரிஸ்த்மஸ் :)

சபரி துணுக்ஸ் : பள்ளிக்கூடத்துல கிருஸ்துமஸ் பார்ட்டிக்கு கிளம்பறார்.

கிருஸ்துமஸ் தொப்பி போட்டுக்கோடா ..
நோ நான் என்ன தாத்தாவா? என்கிட்ட என்ன ஸ்லெட்ஜா இருக்கு .. சைக்கிள் தான் இருக்கு
இல்லடா பர்த்டே தொப்பி டா
ஓகே ஜீஸஸ் பர்த்டே பார்ட்டி ஆரம்பிக்கும் போது போட்டுக்கிறேன் பேக்லயே வைங்க ...

Thursday, August 6, 2009

SAME PINCH






Sunday, July 12, 2009

இது என்ன இடம்?


















இங்கே இருக்கின்ற படங்களில் உள்ள இடங்களெல்லாம் உங்களுக்கு தெரிந்த இடம் தானே? தமிழில் புகைப்படக்கலை போட்டிக்கு எது சரியான தேர்வு ?

இந்தியா கேட் ஐ அருகிலிருந்து எடுக்க நினைத்திருந்தேன். அடிக்கின்ற வெயிலில் அது நடக்காத காரியம்.. கார் நிறுத்துமிடத்திலிருந்து வெகு தூரம் நடக்கவேண்டும். அதற்கு பதிலாக காரிலிருந்தே எடுக்க வசதியான இடமாக தேர்ந்தெடுத்து சென்றோம். புது கேமிராவில்(கேமிரா CANON DIGITAL IXUS 9515) படங்கள் எடுக்க இன்னும் கொஞ்சம் பழகவேண்டும். .

Monday, May 11, 2009

இவர் பெயர் என்ன?- மே மாதப்புகைப்படம்


பறவைகளுக்கு பஞ்சமே இல்லைங்க எங்கவீட்டு பால்கனியிலிருந்து பார்த்தா ஒரு பறவைகள் சரணாலயம் ரேஞ்சுக்கு நிறைய பறவைகளைப் பார்க்கலாம். ஆனால் படம் எடுக்கறதுங்கறது சாதாரண விசயம் இல்லை. அது விருட் விருட்டுன்னு பறக்கும்.. ஒரு செகண்டு க்கொருமுறை அங்க இங்க பார்க்கும்.  இருந்தாலும் அவ்வப்போது க்ளிக்கி வைப்பது தான்.
தமிழில் புகைப்படக்கலை போட்டிக்காக இந்த மாதம் அனுப்புவதற்கென்றே ஒற்றைக்காலில் கொக்காட்டம் தவமிருந்து எடுத்த படங்களில் சிலவற்றை கூகிளில் போட்டிருக்கிறேன். போட்டிக்கான படம் இது தான். ( பெயர் என்னப்பா சொல்லுங்க )  ரொம்ப குட்டியூண்டு  குருவி இது ..  பறக்கும்போது  அலைமாதிரி மேலும் கீழுமா பறக்கும்.

மேலே இருக்க படம் எடுக்கறதுக்கு முன்ன அடிக்கடி அங்க இங்க திரும்பி அது ரொம்ப படுத்திடுச்சு..



மயிலும் பருந்தும் நேற்று அருகில் வரவில்லை. லேப்விங் வந்தது ஆனால் என் கேமிரா க்ளோசப் போகவில்லை. சரி என்று என் வீட்டு பால்கனியில் அரிசி சாதம் என்று விருந்து வைத்து அழைத்தபோது வந்த பறவைகளை எடுத்திருக்கிறேன்.

கம்பத்தோடு கம்பமாக இருப்பவர் தலையைத் திருப்பி தரிசனம் தர எத்தனை நேரம்?


கம்பீர நடை போட்டவள் போட்டோ க்ளிக்கும்போது மட்டும் தலையை மேஜிக்கில் மறைத்துவிட்டாளே .

Monday, February 9, 2009

ரெடி 1 ..2..3.. ஆக்ஷன் - கண நேரக்கண்ணாடி



முதலில் அலைவந்து அழிக்க நினைக்கும் காட்சியைத்தான் போட்டிக்கு அனுப்ப எண்ணினேன்.. இது என் தம்பியின் கேமிராவில் எடுத்தது. கொஞ்ச நாட்களாகவே என் சாதா கேமிராவில் எடுப்பதை போட்டிக்கு அனுப்புவதில் மனதிற்கு சம்மதமில்லை. ;)


சமீபத்தில் தோழியின் மகளை தோழியின் கேமிராவால் படம் பிடித்துக்கொண்டிருந்தேன்..அதில் சிக்கிய சில கண நேரக்கண்ணாடிகள் அழகாக இருந்தபடியால் அவற்றில் முதல் சுற்று இரண்டாம் சுற்றுக்கு விட்டு தேர்ந்தெடுத்த போட்டிக்கான படம் கடைசியில் இருக்கிறது...

Monday, November 10, 2008

அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்!!



சிறுமுயற்சி கங்கா ஆரத்தி பதிவில் இந்த அழகான பெண்ணைப்பற்றி எழுதியதும் எல்லாரும் படம் ஏன் போடலன்னு கேட்க ஆரம்பிச்சிட்டீங்க..ரொம்ப ஆர்வப்படுத்திட்டு நல்லா இல்லன்னா என்ன பண்ரதுன்னு பயம் . ஆனா எடுத்த விதம் வேண்டுமானால் இன்னும் நல்லா இருந்திருக்கலாமே தவிர அவளின் கண்களிலும் உதட்டிலும் மின்னும் சின்னபுன்னகை அழகுதான் அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை.

அவளைத்தான் நான் புகைப்படமெடுக்கிறேன் என்று தெரிந்ததும் ஒரு விதப் பெருமையோடு சிரித்துக்கொண்டாள். தேர்ந்த ஒரு மாடலைப்போல ஆடாமல் அசையாமல் புன்னகையும் மாறாமல் இருந்தாள். விளக்கு வாங்கி விடவேண்டும் என்று மகள் ஆசைப்பட்டபோது அந்த பெண்ணிடமே வாங்க விரும்பினேன் . ஒரு நன்றி தான். ஆனால் அவளைவிட சிறுவன் ஒருவன் இருந்ததால் அவள் அவனிடம் வாங்கும்படி சொன்னாள். எனக்கு அதன் பின்னர் திருப்தியாக இல்லை. பின்னர் மகனுக்காக வாங்கும்போது தேடிப்போய் அவளிடமே வாங்கினேன்.

ஒரு வெளிநாட்டவர் ஒரு பெண்மணியை புகைப்படமெடுக்க முயன்றார். அந்த பெண்மணி உடனே சரியாக அமர்ந்து கொண்டார். உடனே அவர் புகைப்படமெடுப்பதை விட்டுவிட்டு சிரித்தார். " நோ நோ நாட் லைக் திஸ் " என்று முன்பு தாவாங்கட்டைக்கு முட்டுக்கொடுத்தமர்ந்த அவளைப்போல நடித்துக்காண்பித்து அதேபோல் அமர்ந்ததும் படம் எடுத்து சென்றார். அவர் சென்றபின் வெகுநேரம் வெக்கச்சிரிப்புடனே இருந்தார்கள் அந்த பெண்மணி.






இவரைப்படம் எடுக்க எனக்கு பயமாக இருந்தது. அவரும் அவ்வப்போது கவனித்துக்கொண்டு தானிருந்தார். அவர் வெறெங்கோ பார்க்கும்போது சட்டென்று எடுத்துவிட்டேன். அவர் என்னை முறைத்துப்பார்க்க ஆரம்பிப்பது போல் இருந்தது ஓடிவந்துவிட்டேன். பாருங்கள் வெறெங்கோ பார்ப்பது போல ஆனால் புகைப்படத்துக்கு நேராகத்தான் தலையை வைத்திருக்கிறார். படம் எடுத்துவிட்டு காசு கொடுப்பார்களா இருக்கலாம். அது இன்னமும் எனக்குப் பழக்கமாகவில்லை.

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers